திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே மின்சார ரயிலில் அடிபட்ட குரங்குக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. திருவள்ளூர் – சென்னை மின்சார ரயிலில் அடிபட்ட குரங்கை ரயில்வே காவலர்கள் ஆதித்தன், அழகுராஜா மீட்டு முதலுதவி செய்தனர். சிகிச்சைக்கு பிறகு பூண்டி வனச்சரக உதவி ஆய்வாளர் சுதாகரிடம் குரங்கு ஒப்படைக்கப்பட்டது.