மேலும் அதுமட்டுமின்றி அண்டை மாவட்டங்கள் தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பூக்கள் கொண்டு வரப்பட்டு விற்பனையானது நடைபெறும். நாளை இந்த ஆண்டு கடைசி முகூர்த்த நாலா என்பதால் நேற்று ரூ.1,500க்கு விற்பனையான மல்லிகை பூவின் விலை இன்று ரூ.3,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் முல்லை பூ நேற்று ரூ.500க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.1,000க்கு விற்பனையாகிறது. கனகாம்பரம் பூ மற்றும் பிச்சி பூ நேற்று ரூ.400க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.700க்கு விற்பனை செய்யப்படுகிறது. செண்டுமல்லி ரூ.500க்கும், பன்னீர் ரோஸ் ரூ.500க்கும், சம்மங்கி பூ ரூ.200க்கும் விற்பனை செய்யப்பட்டுகிறது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், பொதுமக்கள் பூக்களை வாங்க முடியாத சூழலே நிலவி வருகிறது.
The post நடப்பாண்டில் நாளை கடைசி முகூர்த்த நாள் என்பதால் மதுரை, நெல்லையில் மல்லிகைப்பூ கிலோ ரூ.3,000க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.