தொடர்ந்து உடனே மற்றொரு தற்கொலை படை தாக்குதலும் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 23 ராணுவ வீரர்கள் பலியாகினர். ஏராளமான வீரர்கள் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த பிற ராணுவ வீரர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர். அவர்களில் சிலர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் அனைவரும் சுட்டு கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு தெஹ்ரிக்-இ-ஜிகாத் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த சம்பவம் காரணமாக அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
The post ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள ராணுவ தளம் மீது தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 23 பேர் பலி: ஏராளமானோர் காயம் appeared first on Dinakaran.