எனவே 33 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட பயிர்களை வருவாய் துறை வேளாண் துறை, மற்றும் தோட்டக்கலை துறை கள பணியாளர்கள் உடனடியாக ஒருங்கிணைந்து கூட்டாக கணக்கெடுப்பு செய்து பயிர் சேத அறிக்கையை ஒரு வாரத்திற்குள் சமர்பிக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உத்தரவிடப்பட்டு தற்போது பயிர் சேத கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கணக்கெடுப்பு பணியை துரிதப்படுத்தும் விதமாக வேளாண்துறை மற்றும் தோட்டக்கலை துறையில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அனைத்து வட்டாரங்களிலும் கள ஆய்வு பணி கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே திருவள்ளுர் மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் மிக அதிக கன மழை காரணமாக ஏற்பட்ட பயிர் சேதத்திற்கான உரிய நிவாரணம், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
The post மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக 25,581.18 ஹெக்டர் பரப்பளவில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன: கலெக்டர் அறிவிப்பு appeared first on Dinakaran.
