சென்னை: ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக நாளை மறுநாள் நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. துபாயில் இருந்து சென்னை வந்த ஆர்.கே.சுரேஷ், நாளை மறுநாள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஆஜராக உள்ளார். வழக்கில் தொடர்புடைய ஆர்.கே.சுரேஷ் தலைமறைவான நிலையில் அவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது.