நிகழ்ச்சியில் தமிழர்களின் நாட்டுபுறப் பாட்டு, வில்லுப்பாட்டு, நாடகம், தெருக்கூத்து ஆகியவை பார்வையாளர்களின் இதயம் வெகுவாக கவர்ந்தது. பேச்சுப் போட்டி, நாடகம் ஆகியவற்றில் பங்கெடுத்த மாணவ, மாணவியர் கேரளா-தமிழ்நாடு எல்லைப் பகுதியில் நடக்கும் குழந்தை திருமணம், மூணாறில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் நிலை, போதைப் பொருள் உபயோகம், சமூகத்தில் நிலவும் பிரச்னைகளை எடுத்து கூறும் வகையில் அமைந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பீர்மேடு வஞ்சிவயல் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் வில்லுப்பாட்டு மூலம் பிளாஸ்டிக்கால் சமூகத்தில் ஏற்படும் தீமைகளை எடுத்துக் கூறினர். இதில் பங்கேற்ற பார்வையாளர்கள் தமிழ் கலை விழா அனைவரையும் கவர்ந்ததாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.
The post வில்லுப்பாட்டு, நாட்டுப்புற கலைகளுடன் கேரளத்தை கவர்ந்த தமிழ் கலை விழா: பள்ளி மாணவ, மாணவியர் அசத்தல் appeared first on Dinakaran.