இருப்பினும், பள்ளத்தில் சிக்கிய பெட்ரோல் பங்க் ஊழியர் நரேஷ் என்பவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார். அதேபோல் கட்டுமான பொறியாளர் ஜெயசீலன் என்பவரும் சடலமாக மீட்கப்பட்டார். இருவரும் இளைஞர்கள் ஆவர். ஜெயசீலனின் சடலமானது ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. ஜெயசீலனுக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆகிறது. அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார் என்ற தகவல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், 2 பேரை பலிவாங்கிய கோர விபத்து எதிரொலியாக கட்டுமான நிறுவனத்தின் மேற்பார்வையாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுமான மேற்பார்வையாளர்கள் எழில், சந்தோஷ் ஆகியோரை வேளச்சேரி போலீசார் கைது செய்தனர். பணியின்போது உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாததை அடுத்து வேளச்சேரி போலீஸ் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுத்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
The post வேளச்சேரியில் 2 பேரை பலிவாங்கிய கோர விபத்து எதிரொலி: கட்டுமான நிறுவனத்தின் மேற்பார்வையாளர்கள் 2 பேர் கைது..!! appeared first on Dinakaran.