MEFTAL வலி நிவாரணி மாத்திரை பயன்பாடு : இந்திய மருந்தியல் ஆணையம் எச்சரிக்கை

டெல்லி : மாதவிடாய் வலி, முடக்கு வாதம் உள்ளிட்ட வலிகளுக்கு பயன்படுத்தப்படும் ‘MEFTAL’ வலி நிவாரணி மாத்திரைகளால் மோசமான எதிர்விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என இந்திய மருந்தியல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரத்தத்தில் அளவுக்கு அதிகமான வெள்ளை அணுக்கள் (Eosinophils) உருவாக வாய்ப்பு உள்ளது. தோல் எரிச்சல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் மாத்திரை உட்கொண்ட 2 முதல் 8 வாரங்களுக்கு பின் தோன்ற வாய்ப்புள்ளது. மருத்துவர்கள் அறிவுறுத்தல் இன்றி வலி எழும்போதெல்லாம் இதனை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post MEFTAL வலி நிவாரணி மாத்திரை பயன்பாடு : இந்திய மருந்தியல் ஆணையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: