மிக்ஜாம் புயலால் தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமரிடம் தெரிவித்தேன்: டி.ஆர்.பாலு எம்.பி. பேட்டி

டெல்லி: மிக்ஜாம் புயலால் தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமரிடம் தெரிவித்தேன் என்று திமுக எம்பி டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டி.ஆர்.பாலு, உடனடியாக தமிழகத்திற்கு ரூ.2,000 கோடி வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டது. தமிழகத்திற்கு தேவையான உதவிகளை வழங்குவதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார். ஒன்றிய குழுவை அனுப்பிவைக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

The post மிக்ஜாம் புயலால் தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமரிடம் தெரிவித்தேன்: டி.ஆர்.பாலு எம்.பி. பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: