சதுரகிரியில் 10ம் தேதி முதல் 4 நாள் அனுமதி

வத்திராயிருப்பு: மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்கள் மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கார்த்திகை பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு வரும் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த நாட்களில் மழை பெய்தாலோ, சதுரகிரி கோயிலுக்கு செல்லும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்தாலோ பக்தர்களுக்கு தடை விதிக்கப்படும்.

The post சதுரகிரியில் 10ம் தேதி முதல் 4 நாள் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: