மிசோரம் தேர்தல் தோல்வி: 33 ஆண்டு கட்சி பதவியை ராஜினாமா செய்தார் ஜோரம்


அய்ஸ்வால்: மிசோரம் சட்டப்பேரவைதேர்தலில் ஜோரம் மக்கள் இயக்கம் 27 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இதனால் மிசோ தேசிய முன்னணி ஆட்சியை பறிகொடுத்தது. இந்த கட்சியின் தலைவராக இருந்த பதவி விலகும் முதல்வர் ஜோரம்தங்கா நேற்று கட்சிப்பதவியை ராஜினாமா செய்தார். 79 வயதான அவர் 33 ஆண்டுகள் மிசோ தேசிய முன்னணி கட்சியின் தலைவராக இருந்தார். தற்போது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

The post மிசோரம் தேர்தல் தோல்வி: 33 ஆண்டு கட்சி பதவியை ராஜினாமா செய்தார் ஜோரம் appeared first on Dinakaran.

Related Stories: