மிக்ஜாம் புயல்; ஏனாமில் 6,000 பேர் முகாம்களில் தங்கவைப்பு

புதுச்சோி: சென்னையை மிதக்கச் செய்த மிக்ஜாம் புயல் புதுச்சேரி பிராந்தியங்களில் ஒன்றான ஆந்திராவை ஒட்டியுள்ள ஏனாமிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. புயல் காரணமாக கிழக்கு கோதாவரி, காக்கிநாடாவை ஒட்டியுள்ள ஏனாமில் கனமழை கொட்டித் தீர்த்தது.

சூறாவளிக் காற்றுடன் தொடர்ந்து மழை பெய்த நிலையில் புயல் கரையை கடந்தபோது புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இதற்காக 16 முகாம்கள் அங்கு அமைக்கப்பட்டு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டனர். 20 ஆயிரம் பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன.

The post மிக்ஜாம் புயல்; ஏனாமில் 6,000 பேர் முகாம்களில் தங்கவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: