தண்டவாளத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றுவது உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறன. தாம்பரம், பேசின் பிரிட்ஜ், கோபால்சாமி நகர் பகுதிகளில் தண்டவாளத்தில் தேங்கிய மழைநீர் அகற்றபட்டுள்ளது. சீரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்து நாளை ரயில்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
சென்னை புறநகர் ரயில்கள் இன்று மதியம் 2 மணிக்கு இயங்கத் தொடங்கியதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இன்று இயக்கப்பட்ட அட்டவணைப்படி நாளையும் புறநகர் ரயில்கள் இயங்கும் என அறிவித்துள்ளது. சென்னை கடற்க்கரை- திருவள்ளூர்-அரக்கோணம் மார்க்கத்திலும் புறநகர் ரயில்களின் சேவை தொடங்கியது. திருவொற்றியூர்-கும்மடிப்பூண்டி இடையே ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
The post சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு வழியாக செல்லும் மின்சார ரயில்கள் நாளை முதல் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.