தமிழக அரசை போல தற்போது ஆந்திர அரசும் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்ட தகவலின்படி ஆந்திர மாநில ஓங்கோல் பகுதி கடற்கைரையில் இருந்து 30கிமீ தொலைவிலும், பாபட்லா கடற்கரையில் இருந்து தெற்கு தென்மேற்கு திசையில் 60கிமீ தொலைவிலும் புயல் கரையை கடந்து வருகிறது. மிக்ஜம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்தது.
பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் நான்கு மாவட்டங்களும் பலத்த பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால், பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மீட்புப்பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சென்னை கனமழை பாதிப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு கவன ஈர்ப்பு தீர்மானம் வழங்கியுள்ளார்.
The post கனமழை பாதிப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: டி.ஆர்.பாலு கவன ஈர்ப்பு தீர்மானம் appeared first on Dinakaran.
