லட்டு வாங்கி, போஸ்டர் ஒட்டியது வீணாகிடுச்சே

மபியில் பாஜவின் வெற்றிக்கு முக்கிய காரணமானவர்களில் ஒருவரான ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில், ‘‘மபியை பொறுத்த வரை, ஒன்றியத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மற்றும் மாநிலத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் தலைமையிலான இரட்டை இன்ஜின் ஆட்சிக்கு எப்போதும் மக்களின் ஆசீர்வாதம் உண்டு என எப்போதும் நான் கூறி வருகிறேன். இது மக்கள் நலன் சார்ந்த வளர்ச்சி சார்ந்த கொள்கைகள் கொண்ட ஆட்சி. தேர்தல் முடிவுக்கு முன்பே காங்கிரஸ் மபியில் வெற்றிக் கொண்டாட்டத்தில் இருந்ததை நானும் கேள்விப்பட்டேன். அவர்கள் வாங்கி வைத்திருந்த லட்டு, ஒட்டிய போஸ்டர்கள் எல்லாமே வீணாகிவிட்டது’’ என்றார்.

The post லட்டு வாங்கி, போஸ்டர் ஒட்டியது வீணாகிடுச்சே appeared first on Dinakaran.

Related Stories: