வடசென்னை அனல் மின்நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

 

சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில், கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக, 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.  சென்னை அடுத்த அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தின் முதலாவது நிலையில் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், 2வது நிலையில் 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தியும் என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2வது நிலையின் 1வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கொதிகலன் கசிவை சரிசெய்யும் பணிகளில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து, உயரதிகாரிகள் கூறுகையில், ‘‘விரைவில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு சரி செய்யப்பட்டு மின் உற்பத்தி தொடங்கும்,’’ என்றனர்.

The post வடசென்னை அனல் மின்நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: