குன்றத்தூர் அருகே படப்பை பெரியார் நகர் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்

ஸ்ரீ பெரும்புதூர்: குன்றத்தூர் ஒன்றியம் படப்பை ஊராட்சி பெரியார் நகரில் ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ நாகாத்தம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிேஷகம் நேற்று சிறப்பாக நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி பூஜை, கோ பூஜை, 2ம் கால பூஜை, யாகவேள்வி தத்வார்ச்சனை, விசேஷ மங்கள திரவ்ய ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ரா தானம், கடம் புறப்பாடு போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.

தொடர்ந்து கோயில் கோபுரத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது கோயிலில் குவிந்திருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமி வீதியுலா, வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தது. கும்பாபிேஷக ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், விழா குழுவினர் செய்திருந்தனர்.

The post குன்றத்தூர் அருகே படப்பை பெரியார் நகர் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: