புதுச்சேரிக்கு 440 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: புதுச்சேரிக்கு 440 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. மேற்கு-வடமேற்கு திசையில்! நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரியில் இருந்து 440 கி.மீ. தொலைவில் இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. புயலாக வலுப்பெற்ற பின் வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழ்நாட்டை நோக்கி நெருங்கும்.

The post புதுச்சேரிக்கு 440 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: இந்திய வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: