இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார்.இந்த புதிய சட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுகளில் முதல்முறை முறைகேட்டில் ஈடுபடுவோருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். தேர்வுகளில் தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். மேலும் மாணவர்கள் 10 ஆண்டுகள் வரை போட்டித் தேர்வுகளை எழுதவும் முடியாது. இதே போல் பல்வேறு மோசடிகளுக்கு ஆயுள் சிறை தண்டனையும் ரூ.10 கோடி அபராதமும் இந்த சட்டத்தின் கீழ் விதிக்க முடியும்.
The post ஜார்க்கண்டில் போட்டித் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கும் மசோதா : ஆளுநர் ஒப்புதல்!! appeared first on Dinakaran.