அதன்பேரில், அங்கு சென்ற தனிப்படை போலீசார், நேற்று அதிகாலை 1.30 மணியளவில் துப்பாக்கி முனையில் சைலேந்தரை கைது செய்து, அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சைலேந்திரின் மனைவி பொன்மலர் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், நாங்கள் சென்னையை விட்டுவந்து 5 வருடங்கள் ஆகிறது.
தேவேந்திரகுல மகாசபை தலைவர் ஜெயக்குமாரின் சேம்பரில் வேலை செய்து வருகிறோம். தற்போது எனது கணவர் எந்த ஒரு குற்றச்செயல்களிலும் ஈடுபடாமல் திருந்தி வாழ்ந்து கொண்டிருக்கின்றார். எந்த வழக்குக்காக அவரை போலீசார் அழைத்து சென்றார்கள் என்று தெரியவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக உழைத்து சம்பாதித்து எங்கள் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார், எங்களை வாழ விடுங்கள், என அந்த ஆடியோவில் பேசியிருந்தார்.
The post 30க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர் 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது: ராஜபாளையத்தில் சுற்றிவளைத்தனர் appeared first on Dinakaran.