சென்னை மாநகர காவல்துறையில் துணை கமிஷனர் உட்பட 12 போலீசார் பணி ஓய்வு: கமிஷனர் கவுரவித்தார்

சென்னை: சென்னை மாநகர காவல்துறையில் தலைமையிட துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் உட்பட 12 போலீசார் நேற்று பணி ஓய்வு பெற்றனர். அவர்களை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். சென்னை மாநகர காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெறும் காவல்துறை அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை அனைவரையும் நேரில் அழைத்து, அவர்களை கவுரவிக்கும் வகையில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை மாநகர காவல் துறையில் தலைமையிட துணை கமிஷனராக பணியாற்றி வந்த ராதாகிருஷ்ணன் நேற்று பணி ஓய்வு பெற்றார்.

அதேபோல், 9 உதவி ஆய்வாளர்கள், 2 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 12 போலீசார் நேற்று பணி ஓய்வு பெற்றனர். 25 ஆண்டுகள் முதல் 39 ஆண்டுகள் வரை சிறப்பாக பணிபுரிந்த அவர்களை பாராட்டி, தமிழ்நாடு காவல் துறைக்கும், சென்னை மாநகர காவல்துறைக்கும் பெருமை சேர்த்ததை நினைவு கூர்ந்து போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், ஓய்வு பெற்ற துணை கமிஷனர் உட்பட 12 பேர் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை நேரில் அழைத்து சால்வை அணிவித்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகர தலைமையிட கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரத்கர், இணை கமிஷனர் கயல்விழி, துணை கமிஷனர் மகேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

The post சென்னை மாநகர காவல்துறையில் துணை கமிஷனர் உட்பட 12 போலீசார் பணி ஓய்வு: கமிஷனர் கவுரவித்தார் appeared first on Dinakaran.

Related Stories: