அப்போது திடீரென மழைநீரில் சுருண்டு விழுந்து துடிதுடித்து இறந்தார். இதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் மணிகண்டன் பயன்படுத்திய செல்போனை எடுக்க முயன்றனர். ஆனால், அது சுவிட்ச் ஆப் ஆகாமல் செயல்பாட்டில் இருந்தது. அதை எடுக்க முயன்றபோது லேசாக மின்சாரம் பாய்ந்தது. செல்போன் லேசாக கருகி காணப்பட்டது. இதுகுறித்து அசோக் நகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் வந்து மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். செல்போனை மீட்ட பொதுமக்கள் ஒரு துணியில் மடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து, மணிகண்டன் மின்சாரம் பாய்ந்து இறந்தாரா அல்லது செல்போன் காரணமா என விசாரிக்கின்றனர். மணிகண்டனின் செல்போனை தடயவியல் ஆய்வுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர். மற்றொருவர் சம்பவம்: தி.நகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அசாம் மாநிலத்தை சேர்ந்த அப்துல் அனீப் (32) பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து தனது அறைக்கு செல்ல அவர், வாணி மஹால் வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது, சாலையோரம் இருந்த மின்கம்பம் அருகே மழைநீர் தேங்கி நின்றது. அப்துல் அனீப் மழைநீரில் இறங்கி நடந்தபோது திடீரென மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்த பாண்டி பஜார் போலீசார் அப்துல் அனீப் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரிக்கின்றனர்.
The post தி.நகர், மேற்கு மாம்பலத்தில் மழைநீரில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி appeared first on Dinakaran.