இந்நிலையில், நேற்று முன்தினம் பொன்னேரி தொகுதி எம்எல்ஏ துரை சந்திரசேகர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து, நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே உள்ள பழுதடைந்த சாலைகளையும், நாலூர் பகுதியில் உள்ள அதேப்போன்ற சாலைகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த சாலைகளை பார்வையிட்ட பின் மாவட்ட கலெக்டர், ஜனவரி மாதம் தொடங்கியதும், நெடுஞ்சாலை பணிக்கான டெண்டர் விடப்பட்டு, தார் சாலைகள் சீரமைக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ரூபேஷ் குமார், பொன்னேரி சப் – கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன், பொன்னேரி தாசில்தார் மதிவாணன், நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் சிற்றரசு, உதவி செயற்பொறியாளர் பாலச்சந்தர், செயற்பொறியாளர் பாரதிதாசன், மீஞ்சூர் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ், செயல் அலுவலர் வெற்றி அரசு, மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகர், குமார், துணைத் தலைவர் அலெக்சாண்டர் மற்றும் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள்,அரசு துறை அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் உடன் இருந்தனர்.
The post மீஞ்சூர் அருகே பழுதடைந்த சாலைகள் ஆய்வு appeared first on Dinakaran.