சென்னை: சென்னை தீவுத்திடலில் நடைபெறவுள்ள ஃபார்முலா-4 கார் பந்தயத்துக்கு தடை கோரிய வழக்கில் ஐகோர்ட் நாளை உத்தரவிட உள்ளது. தீவுத்திடலில் நடைபெறவுள்ள கார் பந்தயத்தை இருங்காட்டுக்கோட்டையில் நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. ஸ்ரீஹரிஷ், லூயிஸ்ராஜ் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது.