புதுக்கோட்டை: மறு உத்தரவு வரும் வரை புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரித்துள்ளது. மீனவர்கள் தங்களது மீன்பிடி படகுகள், உபகரணங்களை பாதுகாப்பாக வைக்கவும் மீன்வளத்துறை உத்தரவிட்டது. மோசமான வானிலை காரணமாக புதுக்கோட்டை மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை விதித்து உத்தரவிடப்பட்டது.