ஹைதராபாத்: தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலில் காலை 11 மணி வரை 20.64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தெலுங்கானாவில் உள்ள 119 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 2,290 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆளும் பி.ஆர்.எஸ். கட்சி, பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.