ஒன்றிய அரசின் நிதி உதவியின் கீழ் 2019ல் ஓராண்டுக்கு தொடங்கப்பட்ட இத்திட்டம் கடந்த மார்ச் 31 வரை கூடுதலாக 2 ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. ஒன்றிய அரசின் நிதி உதவி அளிக்கப்பட்ட போதிலும், 754 நீதிமன்றங்கள் மட்டுமே செயல்பட்டன. இந்நிலையில், ₹1,952.23 கோடியில் இத்திட்டத்தை மேலும் 3 ஆண்டுக்கு நீட்டிக்க ஒன்றிய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
இதில் ஒன்றிய அரசு பங்களிப்பாக ₹1,207.24 கோடியும், மாநில அரசுகள் ₹744.99 கோடியும் நிதி வழங்கும். நிர்பயா நிதித் தொகுப்பிலிருந்து ஒன்றிய அரசின் பங்கு விடுவிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ், 414 பிரத்யேக போக்சோ நீதிமன்றங்கள் மற்றும் 761 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் இதுவரை 1 லட்சத்து 95 ஆயிரம் வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமையை இலவசமாக வழங்கும் இலவச உணவு தானியங்கள் திட்டத்தை அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதியிலிருந்து மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
The post பாலியல் குற்ற வழக்குகளுக்கான விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் மேலும் 3 ஆண்டுகள் தொடரும்: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் appeared first on Dinakaran.
