ரூ.4800 கோடி டெண்டர் முறைகேடு எடப்பாடி மீதான வழக்கின் அமர்வை தலைமை நீதிபதி முடிவு செய்வார்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: எடப்பாடி பழனிசாமி மீதான ₹4800 கோடி டெண்டர் முறைகேட்டு வழக்கை விசாரிக்கும் அமர்வை தலைமை நீதிபதி முடிவு செய்வார் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் ₹4.800கோடி டெண்டர் முறைகேடு விவகாரத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது விசாரணை நடத்த கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதற்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எம்.திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர போஸ் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது,’தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன்,’இந்த வழக்கு ஏற்கனவே மூன்று முறை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அனிருத்தா போஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. மேலும் இன்று(நேற்று) இந்த வழக்கில் இறுதி விசாரணை தொடங்கும் என நீதிபதி அனிருத்தா போஸ் அறிவித்திருந்தார்.

ஆனால் தற்போது திடீரென வழக்கு இந்த புதிய அமர்வில் பட்டியலிடப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் டெண்டர் முறைகேட்டு வழக்கை முந்தைய அமர்வே விசாரிக்க வேண்டும். என தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், எடப்பாடி பழனிசாமி தொடர்பான வழக்கை விசாரிக்கும் அமர்வை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முடிவு செய்வார். வேண்டுமென்றால், தலைமை நீதிபதியிடம் சென்று கோரிக்கை வைக்கலாம் எனக்கூறி, அடுத்த விசாரணை தேதியை பதிவிடாமல் ஒத்திவைத்தார்.

The post ரூ.4800 கோடி டெண்டர் முறைகேடு எடப்பாடி மீதான வழக்கின் அமர்வை தலைமை நீதிபதி முடிவு செய்வார்: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: