ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து கடல் வழியாக படகில் கடத்தி வரப்பட்ட 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாம்பன் அடுத்த முந்தல்முனை கடல் பகுதியில் வைத்து தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கம் கடத்தி வந்தவர்களிடம் ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.