தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தடை இல்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: தமிழ்நாட்டின் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த பெண்களுக்கு வங்கிக் கணக்கில் கடந்த 3 மாதங்களாக ரூ.1,000 வரவு வைக்கப்படுகிறது. இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் பி.கே.மிஸ்ரா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்சுகின்,’தமிழ்நாடு அரசு ஏற்கனவே கடனில் உள்ளது.

இதுபோன்ற சூழலில் உரிமைத் தொகை திட்டம் என்பது மேலும் அரசுக்கு கடன் சுமையை அதிகரிக்க வழி வகுக்கும். அதனால் அந்த திட்டம் மற்றும் அதற்கான அரசாணை ஆகியவைக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்தார். ஆனால் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆணையால் தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை விவகாரத்திற்கு எந்தவித தடையும் கிடையாது என்று உறுதியாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தடை இல்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: