இதை பார்த்த பொதுமக்கள், மேலே எழுந்து வரும்படி, போதை ஆசாமியிடம் பலமுறை எச்சரித்தும், அவர் வெளியே வரவில்லை. அதேநேரம் போதையில் அவரால் ஏறி வரமுடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் உடனே மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் வந்து போதை ஆசைாமியை வெளியே அழைத்து வர முயன்றும் பலனில்லை. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரவைழத்து போதை ஆசாமியை பத்திரமாக மீட்டனர்.
மீட்கப்பட்ட நபர் மிகவும் பலவீனமாக இருந்தததால், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், கூவம் காய்வாயில் இறங்கிய நபர் கள்ளக்குறிச்சி மாவட்டம் கொக்கரபாளையம் நாவலூரை சேர்ந்த அமோஷ் (50) என்றும், இவர் கடந்த சில மாதங்களாக சென்னை மந்தைவெளி பறக்கும் ரயில்நிலையம் மேம்பாலத்தின் கீழ் தங்கி, கொத்தனார் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும், போதையில் கூவம் கால்வாயில் இறங்கியதும் தெரியவந்தது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் மயிலாப்பூரில் பரபரப்பு ஏற்பட்டது.
The post மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையம் அருகே கூவம் கால்வாயில் இறங்கிய போதை ஆசாமி மீட்பு appeared first on Dinakaran.