இந்த சம்மன்களை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு அரசின் பொதுத்துறை செயலாளர், நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர், திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் மாவட்ட கலெக்டர்கள் இணைந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் 5 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்க துறை அனுப்பிய சம்மன்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மூத்த வழக்கறிஞர் எம்.பி. என்.ஆர்.இளங்கோ; மணல் குவாரி விவகாரத்தில் போலி ஆதாரங்களை வைத்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
திமுக அரசு மீது களங்கம் விளைவிக்கவே அமலாக்கத்துறையை ஏவி சோதனை நடத்துகிறது ஒன்றிய அரசு. அதிமுக ஆட்சியில் இருந்தபோது அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படாதது ஏன்? மணல் குவாரி வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்திருந்தால் மட்டுமே அமலாக்கத்துறை விசாரிக்க முடியும். தமிழ்நாடு அரசின் மீது அவப்பெயரை ஏற்படுத்தவே பாஜக செயல்படுகிறது என்று கூறினார்.
The post திமுக அரசு மீது களங்கம் விளைவிக்கவே அமலாக்கத்துறையை ஏவி சோதனை நடத்துகிறது ஒன்றிய அரசு: திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோ பேட்டி appeared first on Dinakaran.