திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே கடத்தப்பட்ட 6 வயது பெண் குழந்தை 20 மணி நேர போராட்டத்துக்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டது. கேரள மாநிலம் கொல்லம் ஆசிரமம் மைதானம் அருகில் குழந்தையை விட்டுவிட்டு மர்மநபர்கள் தப்பிச் சென்றனர். தப்பிச் சென்ற மர்மகும்பலை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.