வங்கக்கடலில் புயல் உருவாவதில் தாமதம்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை மையம் கூறியிருந்த நிலையில் வலுவடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து 48 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும். வங்கக்கடலில் உருவாகும் புயல் வடதமிழ்நாடு, தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

The post வங்கக்கடலில் புயல் உருவாவதில் தாமதம்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: