மாஸ்கோ மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் முறியடிப்பு

 

கீவ்: ரஷ்யா உக்ரைன் தலைநகர் கீவ் மீது டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. அதற்கு அடுத்த நாள் உக்ரைன், மாஸ்கோ உள்ளிட்ட தெற்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தியது. அப்போது 24க்கும் மேற்பட்ட டிரோன்கள் ரஷ்ய படையால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக மாஸ்கோ மேயர் செர்கேய் சோபியானின் நேற்று டெலிகிராம் பதிவில் தெரிவித்தார். இது குறித்து உக்ரைன் அதிகாரிகள் கூறுகையில், ‘ 66 ரஷ்ய டிரோன்களை உக்ரைன் சுட்டு வீழ்த்தியது. தாக்குதலில் ஒரு மழலையர் பள்ளி உள்பட பல கட்டிடங்கள் தரைமட்டமாகின. குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது’ என்றனர்.

The post மாஸ்கோ மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் முறியடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: