சென்னையில் அதிகாலையிலேயே கனமழை பெய்தது.இந்த நிலையில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட குறைவாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி முதல் இன்று வரை தமிழ்நாட்டில் 294.8 மி.மீ மழை பெய்துள்ளது. ஆனால் வழக்கமாக இன்று வரை 331.1 மி.மீ மழை பெய்திருக்க வேண்டும். இதனால் 11 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
The post தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 11% குறைவாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.
