கியூஆர் கோடு வசதி அறிமுகம்

நாமக்கல், நவ.25: நாமக்கல் மாவட்டத்தில் 167 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இந்த கடைகளில் மதுபானங்கள் வாங்க, கியூஆர்a கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மதுபானம் வாங்குபவர்கள் ஜிபே, போன்பே, பேடீம் மூலம் பணம் செலுத்தலாம். மாவட்டத்தில் உள்ள ஒரு சில கடைகளில் நேற்று முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இன்று முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுகடைகளிலும் கியூஆர் கோடு மூலம் பணம் செலுத்தி மதுபானங்களை பெற்று கொள்ளலாம் என டாஸ்மாக் பணியாளர்கள் தெரிவித்தனர்.

The post கியூஆர் கோடு வசதி அறிமுகம் appeared first on Dinakaran.

Related Stories: