அரசிலமைப்பு சட்டத்தில் கவர்னர்தான் வேந்தராக இருக்க வேண்டும் என்று சொல்லப்படவில்லை. தமிழக சட்டமன்றத்தில் 2வது முறையாக பல்கலைக்கழக மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் படி அந்த மசோதக்களை கவர்னர் மீண்டும் திருப்பி அனுப்ப முடியாது. ஒப்புதல் அளித்தாக வேண்டும். அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 5 மாநில சட்டமன்றத் தேர்தலிலும் பாஜவை மக்கள் தூக்கி எறிவார்கள். நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜ மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும். இவ்வாறு பேசினார்.
The post அரசியலமைப்பு படி கவர்னர்தான் வேந்தர் என்று சொல்லப்படவில்லை: திருமாவளவன் எம்.பி appeared first on Dinakaran.
