பெரியார் பல்கலையில் சொந்த முதலீட்டில் கல்வி நிறுவனம் தொடங்கிய துணை வேந்தரிடம் விசாரணை: ராமதாஸ் அறிக்கை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், பொறுப்பு பதிவாளர் தங்கவேல், கணினி அறிவியல் துறை இணைப் பேராசிரியர் சதீஸ், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம் கணேஷ் ஆகிய 4 பேரும் இணைந்து பூட்டர் அறக்கட்டளை என்ற கல்வி நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இதுதவிர தங்கவேல் உள்ளிட்ட மூன்று பேர் இணைந்து அப்டெக்கான் போரம் என்ற இன்னொரு அமைப்பை உருவாக்கியுள்ளனர். புதிய நிறுவனங்களில் பூட்டர் அறக்கட்டளையும், பெரியார் பல்கலைக்கழகமும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.

பூட்டர் அறக்கட்டளை லட்சக்கணக்கில் கட்டணம் வசூலித்தாலும், இட ஒதுக்கீட்டை மதிக்காமல் மாணவர் சேர்க்கை நடத்தினாலும் அதுபற்றி பல்கலைக்கழகத்தால் வினா எழுப்ப முடியாது. பெரியார் பல்கலைக்கழகத்தை அதன் துணைவேந்தரும், கூட்டாளிகளும் கூறு போட்டு விற்றுக் கொண்டிருக்கின்றனர். பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டே, அதில் புதிய நிறுவனத்தை தொடங்குவது சட்டவிரோதம். எனவே, பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும், அவரது கூட்டாளிகளும் தனி நிறுவனம் தொடங்கியிருப்பது குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும்.

The post பெரியார் பல்கலையில் சொந்த முதலீட்டில் கல்வி நிறுவனம் தொடங்கிய துணை வேந்தரிடம் விசாரணை: ராமதாஸ் அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: