இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் அவர்களை அப்புறப்படுத்த, நோட்டீஸ் அனுப்பியதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற அமர்வை அவர்கள் அணுகியபோது, 30 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் அவர்களுக்கு மாற்று இடம் தந்துவிட்டு காலி செய்ய உத்தரவிட்டது. ஆனால், குடியிருப்புகளுக்கான மாற்று இடம் தராமல், திடீரென்று 21.6.2022 அன்று அங்கிருந்த 487 வீடுகளையும் இடித்து தரைமட்டமாக்கிவிட்டனர் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். எனவே, பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மாற்று இடத்தை உடனடியாக ஆர்ஜிதம் செய்து, வீடு கட்ட போதிய கடன் வசதி செய்துதர வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post மேல்விஷாரம் நகராட்சியில் இடிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று இடம் தரவேண்டும்: எடப்பாடி கோரிக்கை appeared first on Dinakaran.