இந்த அவதூறு வாட்ஸ்அப் பதிவு குறித்து சாத்தான்குளம் நகர திமுக துணைச் செயலாளர் வெள்ளபாண்டியன்(73) சாத்தான்குளம் போலீசில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் சாத்தான்குளம் போலீசார் எட்வர்ட் ராஜதுரை மீது அவதூறாக பேசுதல், அரசுக்கு எதிராக களங்கம் விளைவிக்கும் விதமாக கருத்துக்களை பரப்புதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் எட்வர்ட் ராஜதுரையை சாத்தான்குளம் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர் நெஞ்சுவலி என தெரிவித்தால் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவ பரிசோதனை நிறைவடைந்த பின் சிறையில் அடைக்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
The post அமைச்சர் உதயநிதி மீது அவதூறு: பாஜக பிரமுகர் அதிரடி கைது appeared first on Dinakaran.
