கோவை: கோவை அருகே தனியார் பள்ளியில் மாணவிகளிடம் அத்துமீறிய பேட்மிண்டன் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளி மாணவிகளுக்கு வாட்ஸ் ஆப்பில் ஆபாசமாக புகைப்படம் அனுப்பி பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவியின் பெற்றோர் அளித்த புகாரில் பேட்மிண்டன் பயிற்சியாளர் அருணை கைது செய்தது போலீஸ்.