கோயம்பேடு, விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர்கள் திடீர் இடமாற்றம்

சென்னை, நவ. 23: சென்னை கோயம்பேடு காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் ரமேஷ்கண்ணா. விருகம்பாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் பூபதிராஜா. இவர்கள் இருவரும் நேற்று மதியம் திடீரென்று கமிஷனர் அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இது, போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், கோயம்பேடு மற்றும் விருகம்பாக்கம் காவல் நிலையங்களில் புகார் கொடுக்க வந்த புகார்தாரர்கள் சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டர்கள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டதால் புகார் கொடுக்காமல் திரும்பிச் சென்றனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, ‘‘ஏற்கனவே கோயம்பேடு மார்க்கெட்டில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புகார் கொடுத்தோம். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டர் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுபோல், விருகம்பாக்கம் காவல் நிலைய சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டரும் மாற்றப்பட்டுள்ளார். எனவே, பொதுமக்களின் நலன் கருதி புதிய ஆய்வாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்’’ என்றனர்.

The post கோயம்பேடு, விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர்கள் திடீர் இடமாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: