சென்னை: திமுக நிர்வாகி கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். லூர் மாவட்டத்தை சேர்ந்தவர் குடியாத்தம் குமரன். இவர் திமுகவுக்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் பேசி வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்தநிலையில் அவரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து பொதுச் செயலாளர் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் குடியாத்தம் குமரன், கழகக் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார். வ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post பிரதமர் மோடி குறித்து விமர்சனம்; திமுக பிரமுகர் குடியாத்தம் குமரன் சஸ்பெண்ட்: துரைமுருகன் அறிவிப்பு appeared first on Dinakaran.
