இந்நிலையில் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கடந்த 8ம் தேதி தமிழ்நாடு மீனவர்கள் 26 பேர் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களில் 4 மீனவர்களை மட்டும் விடுதலை செய்து உத்தரவிட்ட இலங்கை நீதிமன்றம், மீதி 22 தமிழக மீனவர்களின் நீதிமன்ற காவலை நவம்பர் 15ம் தேதி வரை நீடித்தது. இதற்கிடையே கடந்த 9ம் தேதி மேலும் 38 மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
நீதிமன்றம் 38 மீனவர்களையும் விடுதலை செய்தது. அதோடு ஏற்கனவே விடுதலையான 4 மீனவர்கள், மறுநாள் விடுதலையான 38 மீனவர்கள் உட்பட 42 மீனவர்களையும், இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் இலங்கை அரசு அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதற்கிடையே கடந்த 15ம் தேதி வரை காவல் நீடிக்கப்பட்ட 22 தமிழக மீனவர்களும், இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் 64 தமிழக மீனவர்களையும், தங்களுடைய பராமரிப்பில் வைத்து, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை போன்றவைகளை நடத்தினர். அதன்பின்பு அவர்கள் அனைவருக்கும் பாஸ்போர்ட் விசாக்கள் இல்லாததால், இந்திய தூதரகம் எமர்ஜென்சி சர்டிபிகேட்கள் வழங்கியது. அதோடு 64 மீனவர்களையும் இலங்கையிலிருந்து, இந்தியாவிற்கு விமானத்தில் அனுப்புவதற்கான விமான டிக்கெட்கள் ஏற்பாடுகளையும் செய்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை, இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து சென்னை வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், 15 ராமேஸ்வரம் மீனவர்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு அரசு சார்பில், தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களை வரவேற்றனர். அதன்பின்பு தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் அவர்கள் ஏற்றப்பட்டு அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இலங்கையில் இந்திய தூதரக பராமரிப்பில் இருக்கும் மற்ற மீனவர்கள், அடுத்தடுத்த சில நாட்களில் விமானங்கள் மூலம் சென்னை வருவார்கள் என்று கூறப்படுகிறது.
The post இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 15 தமிழக மீனவர்கள் சென்னை வந்தனர்: தமிழக அரசு சார்பில் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைப்பு appeared first on Dinakaran.