முதல்வரை அவதூறாக பேசிய வழக்கு நீதிமன்றத்தில் மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் ஆஜர்

விழுப்புரம்: தமிழக முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்மும் விழுப்புரம் கோர்ட்டில் இன்று ஆஜரானார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நாட்டார்மங்கலம் மற்றும் வானூர் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் நடந்த அதிமுக பொதுக்கூட்டங்களில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழக முதல்வருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும், ஆட்சிக்கு களங்கம் கற்பிக்கும் முறையிலும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் சுப்பிரமணியன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த இரண்டு வழக்கிலும் நவ.21ம்தேதி நேரில் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டதால் சி.வி.சண்முகம் இன்று விழுப்புரம் முதன்மை நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது நீதிபதி வெங்கடேசன் வழக்கை டிச.21ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார். மேலும் இதே போன்று கோட்டக்குப்பம் அடுத்த ஆரோவில்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாக சி.வி.சண்முகம் மீது வழக்கு தொடரப்பட்ட வழக்கும் டிசம்பர் 21ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

The post முதல்வரை அவதூறாக பேசிய வழக்கு நீதிமன்றத்தில் மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் ஆஜர் appeared first on Dinakaran.

Related Stories: