எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது; இந்திய கடலோர காவல் படை நடவடிக்கை..!!

ராமநாதபுரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது செய்து இந்திய கடலோர காவல் படை நடவடிக்கை எடுத்துள்ளது. ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு படகுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக கடலோர பகுதியில் இருந்து கடந்த காலமாக தடை செய்யப்பட்ட கஞ்சா, ஹெராயின், அடல் அட்டை, சமையல் மஞ்சள், தங்கம் உள்ளிட்டவை கடத்தப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. இதனை தடுக்கும் நோக்கத்தில் இந்திய கடலோர காவல் படை மற்றும் கடற்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, இலங்கை தலைமன்னார் பகுதியை சேர்ந்த 5 மீனவர்கள் ஒரு படகுடன் சர்வதேச எல்லையை கடந்து இந்திய எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். உடனடியாக அவர்களை சுற்றிவளைத்த இந்திய கடலோர காவல்படையினர், 5 பேரை கைது செய்து, அவர்கள் பயணித்த ஒரு படகையும் பறிமுதல் செய்தனர். இவர்கள் மீன் பிடிப்பதற்காக எல்லை தாண்டி வந்தார்களா? அல்லது கடத்தல் பொருள் கொண்டு வந்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

The post எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது; இந்திய கடலோர காவல் படை நடவடிக்கை..!! appeared first on Dinakaran.

Related Stories: