ரூ.23.35 கோடியில் கட்டப்பட்ட கூட்டுறவு கிடங்குகள், ஆய்வுக்கூடங்கள் திறப்பு

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் ரூ.23.65 கோடி செலவில் திருச்செங்கோடு, ஈரோடு, ராசிபுரம், பெருந்துறை ஆகிய இடங்களிலுள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் கட்டப்பட்டுள்ள கிடங்குகள், தானியங்கி வகைப்படுத்தும் மற்றும் தரப்படுத்தும் இயந்திரங்களுடன் கூடிய ஏல களங்கள் மற்றும் ஆய்வுக்கூடம், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் தென்மேல்பாக்கம் நகர கூட்டுறவுக் கடன் சங்கங்களில் கட்டப்பட்டுள்ள புதிய சங்கக் கட்டடம் மற்றும் திருமண மண்டபத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

சிந்தாதிரிப்பேட்டை நகர கூட்டுறவுக் கடன் சங்கத்தில் 2,306 சதுர அடி பரப்பளவில் ரூ.75 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம். பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மறைமலைநகரில், தென்மேல்பாக்கம் நகர கூட்டுறவுக் கடன் சங்கத்தில் 16,000 சதுர அடி பரப்பளவில் ரூ.3.52 கோடி செலவில் சங்கத்தின் சொந்த நிதியில் கட்டப்பட்டுள்ள கூட்டுறவு திருமண மண்டபம், என மொத்தம் ரூ.23.35 கோடி செலவில் கூட்டுறவுத் துறை கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பெரியகருப்பன், காந்தி, தலைமைச்செயலாளர் சிவ் தாஸ் மீனா, கூடுதல் தலைமை செயலாளர் கோபால், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post ரூ.23.35 கோடியில் கட்டப்பட்ட கூட்டுறவு கிடங்குகள், ஆய்வுக்கூடங்கள் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: