இந்நிலையில், கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற கூட்டத்தில் திருவொற்றியூர் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று கே.பி.சங்கர் எம்.எல்.ஏ, முதல்வரிடம் கோரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து விம்கோ நகர் அருகே உள்ள ரீட் கூட்டுறவுக்கு சொந்தமான இடத்தை கே.பி.சங்கர் எம்எல்ஏ மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கல்லூரிக்கு கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்து துறை ரீதியான ஆவன நடவடிக்கை எடுத்தனர். ஆனாலும் இந்த இடம் ஒதுக்கீடு தொடர்பான ஆவணம் முழுமை பெறாமல் அப்படியே கிடப்பில் உள்ளதால் கல்லூரிக்கு கட்டிடம் கட்ட முடியாத நிலை உள்ளது. எனவே, தொடர்ந்து மாணவ, மாணவிகள் இடநெருக்கடியில் பாடம் படித்து வருகின்றனர். இந்நிலையில் திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் நடந்த மண்டல குழு கூட்டத்தில் திருவொற்றியூர் அரசு கல்லூரிக்கு கட்டிடம் கட்ட ரீட் கூட்டுறவு இடத்தை ஒதுக்கீடு அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று தி.மு.தனியரசு மற்றும் கவுன்சிலர்கள் சார்பில் முதல்வருக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
The post அரசு கல்லூரிக்கு கட்டிடம் கட்ட ரீட் கூட்டுறவு இடம் ஒதுக்கீடு அரசாணை பிறப்பிக்க வேண்டும்: திருவொற்றியூர் மண்டல குழுவில் தீர்மானம் appeared first on Dinakaran.