மீட்புப் பணியில் நேற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுரங்க இடிபாடுகளில் நேற்று 6 அங்குல அகல குழாய் அமைக்கப்பட்டது. இதற்கு முன் இங்கு 4 அங்குல அகல குழாய் இருந்தது. இதன் வழியாக உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்களுக்கு உலர் பழங்கள், மருந்து, ஆக்சிஸன் போன்றவை அனுப்பப்பட்டன. தற்போது 6 அங்குல அகல குழாய் அமைக்கப்பட்டிருப்பதால் ரொட்டி, சப்ஜி போன்ற உணவுகளையும் அனுப்ப முடியும் என்றும்,தொழிலாளர்களை தொடர்பு கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.
The post சுரங்கத்தில் சிக்கிய 41 பேர் மீட்புப்பணியில் முன்னேற்றம்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.